வியாழன், 5 ஜூன், 2008

நேற்றைய காற்று 05.06.2008

கடிகாரம்
எப்போவாவது பார்க்கப்படும் நேரத்திற்காக
தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கின்றன
நினைவுச் சக்கரங்கள்
.
கிணறு
படிக்கட்டால் இறங்கி
பாத்திரத்தை எடுக்கமுடியும்
ஆனாலும்
நான் குதித்தேன்
உள்ளே விழுந்தது
நீயாயிற்றே !
.
வாய்ப்பாடு
மனனம் செய்யாததால்
பேச்சு விழுந்தது எனக்கு
உன் பெயரை
மனனம் செய்ய தொடங்கியதால்
அவசரமாக நடந்தது
கலியாணப் பேச்சு
உனக்கு!
.
தீப் பெட்டி
பெட்டியின் கன்னத்தை
உரஞ்சும் போது
பற்றிக் கொள்வது
குச்சிகள் மட்டும் அல்ல!
.
வேட்டை
பதுங்கிக் கொண்டே வருகிறாய்
இனி என்ன
நான் பாய்ந்து தானே ஆகவேண்டும்!
.
வெற்றிலை
வெற்றிலை வைத்து
வரவேற்காது விட்டால் பரவாயில்லை
வெற்றிலை காவியை
துப்பாவிட்டாலே போதும் !

05.06.2008

கருத்துகள் இல்லை: