செவ்வாய், 11 மார்ச், 2008

சிறு கவிதைகள் 13.10.2005

மழை
வானம் இன்று
உன்னை போலவே
செல்லமாக
சினுங்கி கொண்டு இருக்கிறது !

காயம்
எனக்கு ஈரமான நெஞ்சு
அதனால்
மொட்டையான உன் பார்வை கூட
குற்றி விட்டது !

நடனம்
தப்பு தப்பாய்
என் மனது

தாளம் போட்டாலும்
ஜதி பிசகாமல்
நடந்து போகும்
நீ

பழைய கவிதைகள்


ஒன்று
Efficasy இல்லாத drug உம்
புசிப்பதற்கு இல்லாத உணவும் !

தாலாட்டு
Lcctures after the
lunch

SEQ
Lecture ஐ கேட்பதுடன்
நின்றுவிடாது
எனக்கும் ஒரு வரி
எழுதுங்கள் !

விளங்கேல்லை!
குழந்தைகள் பால் குடிக்குமாம்.
குமரன் எப்போது
குழந்தை ஆனான்?

கோளாறுகள்

காது கேட்காமல் போவது
வயதானவர்களுக்கு வரும் கோளாறு அல்ல
அது ஒரு வயசுக் கோளாறு

அண்ணா அன்று அவள் சொன்னது
கண்ணா என்று தான் என் காதில் விழுந்தது

விடுங்கள் என்று தளபதி சொன்னதை
சுடுங்கள் என்று சிப்பாய் கேட்டதால்
என் உயிர் பிரிந்தது
வாலிப சிப்பாயின் காதலிக்கு
அன்றுதான் கலியாணம் !