செவ்வாய், 11 மார்ச், 2008

கோளாறுகள்

காது கேட்காமல் போவது
வயதானவர்களுக்கு வரும் கோளாறு அல்ல
அது ஒரு வயசுக் கோளாறு

அண்ணா அன்று அவள் சொன்னது
கண்ணா என்று தான் என் காதில் விழுந்தது

விடுங்கள் என்று தளபதி சொன்னதை
சுடுங்கள் என்று சிப்பாய் கேட்டதால்
என் உயிர் பிரிந்தது
வாலிப சிப்பாயின் காதலிக்கு
அன்றுதான் கலியாணம் !

கருத்துகள் இல்லை: