செவ்வாய், 11 மார்ச், 2008

சிறு கவிதைகள் 13.10.2005

மழை
வானம் இன்று
உன்னை போலவே
செல்லமாக
சினுங்கி கொண்டு இருக்கிறது !

காயம்
எனக்கு ஈரமான நெஞ்சு
அதனால்
மொட்டையான உன் பார்வை கூட
குற்றி விட்டது !

நடனம்
தப்பு தப்பாய்
என் மனது

தாளம் போட்டாலும்
ஜதி பிசகாமல்
நடந்து போகும்
நீ

கருத்துகள் இல்லை: