வியாழன், 12 ஜூன், 2008

குட்டிகவிதைகள் வியாழன் 12.06.2008

சூரியன் எப் எம் நேற்றைய காற்று

தாவரம்

கண்களின் மடல்கள் அசைந்து

காட்டிக் கொடுத்து விடுகின்றன

காதல் வீசிக் கொண்டு இருப்பதனை

அசையாத தாவரங்கள் என்று

யார் சொன்னார்கள் ?

.

ஆமை

தண்ணீருக்குள் தாண்டு விடுகிறாய்

தரையில் என்றால் தலையை உள்ளே இழுக்கிறாய்

காதலுக்கு நீ காட்டுவது

புறமுதுகா?

.

நூலகம்

நீ

திருப்பிக் கொடுக்க முடியாத

இரவல் புத்தகம்

தண்டப் பணம் தவறாமல் செலுத்தும்

வாசகன் நான்!

.

வானொலி

சைக்கிளை தலை கீழாகப் போட்டு

டைனமோவில்

பாட்டு கேட்டதுபோல்ஒரு

சந்தோசம்

தெருவில் நீ போகிறாய்

.

மொழி

எத்தனை மொழிகள் எனக்கு தெரியும்

உன் கண்கள்

உதடுகள்

பின்னல் பேசும்

எத்தனை மொழிகள்

எனக்கு தெரியும் !

.

உப்பு

உப்பு விளைவது

உப்பளத்தில் மட்டுமல்ல

உன் கோபத்தால்

என் தலையணை

உறையிலும் தான்.

வியாழன் 12.06.2008

கருத்துகள் இல்லை: