வியாழன், 21 ஆகஸ்ட், 2008

தமிழன் வாழ்வு

ஷெல்லடிக்க ஓடுகிற வாழ்க்கை- பின்னர்
சேருகின்ற அகதி முகாம் சேர்க்கை
பல்குழல்கள் சீறிவர பாரதிரக் குண்டுவிழ
கல்வியது பாழாகிப் போகும்- கண்கள்
காண முன்னர் உடல் விழுந்து சாகும்

வளைய மாட்டன் என்று சொல்லும் பனைகள் - அதன்
வட்டுக்களை சீவும் எறிகணைகள்
வட்டிழந்து போயுமென்ன குற்றுயிராய் ஆயுமென்ன
மொட்டைமரம் வானத்தினைப் பார்க்கும்- தலை
முளைத்து வரும் வடலியினைக் காக்கும்

ஆடுதுலாத் தண்ணியள்ளும் தங்கை- அவள்
ஆயுதத்தில் கையை வைத்தாள் பங்கை
ஓடுகின்ற கள்ளளினை ஒளித்துவரும் கொள்ளையனை
சூடு என்ற மந்திரத்தால் பற்றி – அவள்
சுட்டதிலே எங்களுக்கு வெற்றி!

2006

கருத்துகள் இல்லை: