திங்கள், 25 ஆகஸ்ட், 2008

தூக்கசுந்தரி!

சொக்க எறிந்திடும் சுழல்விழியாள்-ஒளி
சுற்றி வளர்ந்திடும் கயல்விழியாள்
பக்கமாகவே வந்தமர்ந்;தாள்-எனைப்
பார்த்து முறுவலைப் பூத்திருந்தாள்.

எங்கையோ கண்டதுபோலிருந்தும்-அது
எந்தன் நினைவுக்கு எட்டவில்லை!
முந்தைப் பிறப்பதன் தொடர்பதுவோ?-இல்லை
மூளும் கனலது வேறெதுவோ??

எட்டி இடைதொடக் கரந்துடிக்கும்-அது
இல்லை முறையென மனந்தடுக்கும்
கட்டிப் பிடித்தவள் கன்னங்களில் -சிறு
காயப்படுத்தினால் சே ..வலிக்கும்.

பெயரைக் கேட்பதில் பிழையில்லையே-கழுத்துப்
பென்ரனும் இனிசியல் சொல்லுகுதே
அயரைப் போலெந்தன் நாவதுவும் -மேல்
அண்ணத்தில் ஒட்டியே காய்ந்ததுவே

எழும்பு நீ என்றெனை உலுக்கியவன்-அட
ஏழரை ஆச்சுது என்று சொன்னான்
அரும்பு மீசையின் காலத்திலே -கனவு
ஆக்கினை கூடவே| என்றான் நண்பன்!

கருத்துகள் இல்லை: