செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

இம்சை
காகிதமும் பேனையுமாக
கதிரையில் உட்கார்ந்தேன்
ஐயோ, இண்டைக்கும்
கவிதை எழுதப்போகிறாயா
கட்டிலில் புரண்டு படுத்தான்
நண்பன்.

அதிர்ஷ்டம்
யார்யாரோ எதிர்பார்த்துக்கொண்டிருக்க
கர்ப்பப் பையிலேயே உனை
தொட்டுத்தூக்கும்
பிரசவ மருத்துவன்.

நன்றிக் கடன்
நன்றி டொக்ரர் என்றபடி
கையில் திணித்தாய்
நான் என்றும் உண்ணாத
முட்டைக் கேக்.

மழலை
சின்ன முத்தத்திற்கு பதிலாக
சிறுநீர் கழித்தாய்
நீயும்
அவளைப்போல
முத்த எதிர்ப்பு முன்னணியை சேர்ந்தவளா?


பனிரோஜா
சிவப்பு ரோஜாவின்
இதழில் வெள்ளைப் பனி
குழந்தை
பால்குடிக்கிறது.




பாவஜீவன்
ஒன்றைவிட்ட ஒருநாள் oncall
செய்தே
களைத்துப்போகிறேன்
ஒவ்வொரு நாளும்
oncall செய்யும்
மன்மதன்
பாவம்!

மருந்து
வயிற்றால் போகாவிட்டால்
வாழைப்பழம் சாப்பிடலாம்
அல்லது
சரஸ்வதியில்
சாப்பிடலாம்.

புதிய பரிமாணம்.
நேற்று சோறு,
இன்று உழுந்துடன் சேர்ந்ததால்
வடை,
நாளை தோசையில் ஒரு கூறு.
மசாலாத் தோசையின்
மகத்துவம் இதுதான்.

கருத்துகள் இல்லை: